Friday 22 March 2013

சிறுநீரகத்தை ஆரோக்கியத்துடன் வைக்கும் உணவுகள்.........!!

சிறுநீரகத்தை ஆரோக்கியத்துடன் வைக்கும் உணவுகள்.........!!

ஒவ்வொரு வருடமும் உலக சிறுநீரக தினம் மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் வரும் வியாழக்கிழமையன்று கொண்டாடப்படும். இந்த நாளில் சிறுநீரகத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஆங்காங்கு நடைபெறும். உடலிலேயே சிறுநீரகம் தான் இரத்தத்தை சுத்தப்படுத்தும் ஒரு உறுப்பு. எனவே சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமை.

நீரிழிவால் மக்கள் எவ்வளவு அவஸ்தைப்படுகின்றனரோ, அவ்வளவு மக்களும் சிறுநீரகப் பிரச்சனையாலும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இத்தகைய சிறுநீரக பிரச்சனை வராமல், சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். நீர்ச்சத்து குறைவாக இருந்தாலும், சிறுநீரகப் பிரச்சனை வரும்.

சிறுநீரகம் சீராக இயக்குவதற்கு, தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்வது, நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும். அதிலும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் என்றால், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் அதிக இரத்த அழுத்தமும் சிறுநீரகத்தை பாதிக்கும். எனவே அவ்வப்போது இரத்த பரிசோதனை மற்றும் இரத்த அழுத்தத்தை பரிசோதித்து பார்க்க வேண்டும்.

ஆய்வு ஒன்றில் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நிறைய உணவுகள் உள்ளன என்றும், அவற்றை சரியாக சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தை மட்டுமின்றி, உடல் முழுவதையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறுகிறது. சரி, இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போம்.

1) பூண்டு :

பூண்டின் நன்மைகளை சொல்லவே வேண்டாம். இதனை அதிகம் சாப்பிட்டால், இதய நோய் வருவதை தவிர்ப்பதோடு, இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைப்பதோடு, உட்காயங்களையும் குறைத்துவிடும்.

2) பெர்ரிப் பழங்கள் :

பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, அவுரிநெல்லி, ராஸ்பெர்ரி போன்றவை சிறுநீரகத்திற்கு தேவையான சத்துக்களை உள்ளடக்கியது. இதனை சாப்பிட்டால், சிறுநீரகம் ஆரோக்கியமாக இயங்குவதோடு, குடலியக்கமும் முறையாக நடைபெறும்.

3) சிவப்பு குடைமிளகாய் :

சிறுநீரக நோய் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, சிவப்பு குடைமிளகாய் மிகவும் சிறந்த உணவுப் பொருள். இதில் பொட்டாசியம் குறைவாகவும், வைட்டமின்களான ஏ, சி மற்றும் பி6, ஃபோலிக் ஆசிட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைப்பதோடு, எந்த வகையான புற்றுநோயையும் வராமல் தடுக்கும்.

4) முளைகட்டிய பயிர்கள் :

முளைக்கட்டிய பச்சைப் பயிர்களை டயட்டில் சேர்ப்பது மிகவும் நல்லது. இந்த முளைக்கட்டிய பயிர்கள் சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, சிறுநீரக கற்கள் வராமலும் தடுக்கும்.

5) முட்டைகோஸ் :

முட்டைகோஸ் மிகவும் சிறந்த காய்கறி. இந்த காய்கறி சிறுநீரக இயக்கத்தை சீராக வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இத்தகைய காய்கறிகளையும் உணவில் அவ்வப்போது சேர்த்து வர வேண்டும்.

6) ஆப்பிள் :

ஆப்பிள் சாப்பிட்டால், இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, இரத்தத்தை சுத்திகரிக்கும் சிறுநீரகமும் சுத்தமாக இருக்கும். எனவே தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வருவது நல்லது.

7) ஆலிவ் ஆயில் :

அனைவருக்குமே ஆலிவ் ஆயில் பயன்கள் தெரியும். இந்த எண்ணெய் இதயத்திற்கு மிகவும் சிறந்தது. மேலும் ஆலிவ் ஆயிலில் உள்ள ஃபேட்டி ஆசிட்டுகள், சிறுநீரகத்தை ஆரோக்கியமாக செயல்பட வைக்கின்றன. எனவே சமையலில் ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்துவது நல்லது.

8) வெங்காயம் :

வெங்காயத்தை அதிகம் சாப்பிட்டால், சிறுநீரக கற்களை வருவதை இயற்கையாகவே தடுக்கலாம். மேலும் இது சிறுநீரகத்தை சுத்தமாகவும் வைத்துக் கொள்ளும்.

9) சிவப்பு திராட்சை :

திராட்சை பிடிக்காது என்று ஒதுக்கிவிட வேண்டாம். ஏனெனில் திராட்சையும் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைப்பதில் மிகவும் சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் சிவப்பு திராட்சையில் ஃப்ளேவோனாய்டுகள் இருப்பதால், இவை இதயத்திற்கும், சிறுநீரகத்திற்கும் மிகவும் சிறந்தது.

10) செர்ரி :

செர்ரியில் வைட்டமின்கள் அதிகமாகவும், புரோட்டீன்கள் குறைவாகவும் உள்ளது. மேலும் இவை உடலில் உள்ள பொட்டாசியத்தின் அளவைக் குறைத்து, சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. ஆகவே இத்தகைய செர்ரிப் பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம்.

11) முட்டை வெள்ளை கரு :

முட்டையின் வெள்ளைக் கருவில் அமினோ ஆசிட்டுகள் அதிகமாகவும் மற்றும் பாஸ்பரஸ் குறைவாகவும் உள்ளது. இதுவும் ஒரு சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் உணவுப் பொருட்களுள் ஒன்று.

12) மீன் :

மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளதால், இவை சிறுநீரகத்தை நோய் தாக்காமல் பாதுகாக்கிறது. அதிலம் சால்மன், ரெயின்போ ட்ரூட், கானாங்கெளுத்தி, ஹெர்ரிங் மற்றும் சூரை போன்ற மீன்கள் ஆரோக்கியமானது.

13) காலிஃப்ளவர் :

பச்சை இலைக் காய்கறிகளுள் காலிஃப்ளவரும் ஒரு சிறப்பான உணவுப் பொருள். ஏனெனில் இதில் வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இவை உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சிறுநீரகத்தை சீராக இயங்க வைக்கும். எனவே இதனை அதிகம் உணவில் சேர்ப்பது நல்லது.

Monday 11 March 2013

வெயிலுக்கு இதமான வெள்ளரிக்காய்

வெயிலுக்கு இதமான வெள்ளரிக்காய்

இப்பவே வெயிலோட தாக்கம் அதிகமாயிடுச்சு. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க இயற்கை நமக்கு ஏராளமானவற்றை தந்திருக்கு. அந்தவகையில், வெயிலுக்கு இதமான வெள்ளரியில் அதிக நன்மைகள் உள்ளன. வைட்டமின் பி சத்துள்ள இந்த வெள்ளரியில் நீர்சத்து அதிகம் உள்ளது.

100 கிராம் வெள்ளரியை அப்படியே சாப்பிட்டால் நமக்கு,
கார்போஹைடிரேட் - 3.63 கிராம்
சர்க்கரை - 1.67 கிராம்
நார்ச்சத்து - 0.5 கிராம்
கொழுப்புச்சத்து - 0.11 கிராம்
புரோட்டின் - .65 ராம்
விட்டமின் பி1 - 0.027 மில்லி கிராம்
விட்டமின் பி2 - 0.033 மில்லி கிராம்
விட்டமின் பி3 - 0.098 மில்லி கிராம்
விட்டமின் பி5 - 0.259 மில்லி கிராம்
விட்டமின் பி6- 0.040 மில்லி கிராம்
விட்டமின் இ - 2.8 மில்லி கிராம்
கால்சியம் - 16 மில்லி கிராம்
இரும்புசத்து - 0.28 மில்லி கிராம்
மெக்னீசியம் - 13 மில்லி கிராம்
பாஸ்பரஸ் - 24 மில்லி கிராம்
பொட்டாசியம் - 147 மில்லி கிராம்
சிங்க் 0.20 மில்லி கிராம் போன்ற சத்துக்கள் சத்தமின்றி வந்து சேரும்..

வெள்ளரியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிரஷர் சமநிலைப்படும். நெஞ்சக எரிச்சல், வயிற்று எரிச்சல், அல்சர், வாயுத்தொல்லைகளும் குணமடை யும். மேலும் வெள்ளரி, கேரட் கலந்த ஜூ�ஸ குடித்து வந்தால் வாத சம்பந்தமான நோய்கள் குணமடையும். கண்களைச் சுற்றி வெள்ளரி துண்டுகளை வைப்பதன் மூலம் கண் எரிச்சல் மாறுவதுடன் வீக்கமும் குணமடையும்.

உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது. கண் எரிச்சலில் இருந்து நம்மை காக்கிறது. வெள்ளரியை சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரிக்கும். கேன்சர் வராமல் தடுக்கிறது. தலைவலியில் இருந்து காக்கிறது. உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது. கொழுப்பை குறைக்கும் தன்மை வெள்ளரிக்கு உண்டு. தோல் மற்றும் முடியை பாதுகாக்கிறது. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது வெள்ளரி. இதுபோன்ற ஏராளமான நன்மைகள் கொண்ட வெள்ளரியை நாமும் சாப்பிட்டு பயன்பெறலாமே.

Friday 8 March 2013

செவ்வாழை பழம் பற்றிய தகவல்..........!!


செவ்வாழை பழம் பற்றிய தகவல்..........!!

எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

மாலைக்கண்நோய் :

கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.

மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.

பல்வலி குணமடையும் :

பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

சொரி சிறங்கு நீங்கும் :

சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.

நரம்பு தளர்ச்சி குணமடையும் :

நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.
குழந்தை பேறு தரும்

திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

தொற்றுநோய் தடுக்கப்படும் :

தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.

தகவல் : குட்டி

தாய்பாலின் அதிசயங்கள்!!!

தாய்பாலின் அதிசயங்கள்!!!

தாய்ப்பாலிலுள்ள ஹேம்லெட் என்ற பொருள், 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் பெற்றுள்ளது என, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி கண்டறிவதற்காக ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது, தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது தான், ஹ்யூமன் ஆல்பா லாக்தல்பூமின் மேட் லெதல் டூ ட்யூமர்! இதன் சுருக்கம்தான், ஹேம்லெட்! மனித உடலில், ஹேம்லெட் என்ன பங்காற்றுகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

சமீபத்தில், ஸ்வீடன் நாட்டின் லுண்ட் பல்கலை மற்றும் கோத்தென் பெர்க் பல்கலையின் ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், இந்த ஹேம்லெட் மனித உடலிலுள்ள 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வின் போது, சிறுநீர்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு, ஹேம்லெட் கொடுக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது, சிறுநீருடன் புற்றுநோய் செல்கள் இறந்த நிலையில் வெளியேறியது கண்டறியப்பட்டது.

இதன் மூலம், புற்றுநோய்க்கான சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படக் கூடும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். ஹேம்லெட் புற்றுநோய் செல்களை மட்டுமே அழிக்கிறது; மற்ற செல்களை பாதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹேம்லெட் எப்படி புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது குறித்து, ஆய்வு நடந்து வருகிறது. குழந்தையின் வயிற்றில் செல்லும் தாய்ப்பாலில் உள்ள, ஹேம்லெட் அங்கு, அமிலத் தன்மையை உருவாக்குகிறது. அதன் மூலமே, கேன்சர் செல்கள் அழிக்கப்படுகின்றன என்று தெரிய வந்துள்ளது.

தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒவ்வாவை நோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது. ஒவ்வாமையினால் வரும் ஆஸ்த்மா நோயைத் தடுக்கும் சக்தி தாய்ப்பாலுக்கு இருக்கிறது குழந்தைகளுக்கு தாய்ப்பால் பல வழிகளிலும் ஆரோக்கியத்தைத் தருகின்றது. பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதலில் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கின்றனர் ஆனால் சில வாரங்களிலேயே பல்வேறு காரணங்களைக் காட்டி நிறுத்திவிடுகின்றனர்.. இது மிகவும் தவறானதாகும்.

ஆறுமாதங்கள் முதல் ஒரு வயது வரை தாய்ப்பாலில் குழந்தைகள் வளர்வதே ஆரோக்கியமானது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் மருத்துவமனைகளுக்குச் செல்லும் வாய்ப்பு 80% குறைகிறது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அதிக எடையுடன் வளரும் ஆபத்திலிருந்தும் தப்பிக்கிறது. குழந்தையின் தாடை வளர்ச்சிக்கும் இது பயனளிக்கிறது. குழந்தைப் பருவத்தைக் கடந்து வாலிப வயதை அடையும் போது கூட குழந்தைகள் சரியான எடையில் வளர சிறு வயதில் குடிக்கும் தாய்ப்பால் உதவுகிறது. தாய்ப்பாலை குறைந்தது முதல் ஆறுமாதங்கள் குடித்து வளரும் குழந்தைகள் நீரிழிவு நோயினின்றும் தப்பி விடுகின்றன.

குறிப்பாக குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவு நோய் இருந்தால் குழந்தைக்கு ஆறுமாதங்கள் வெறும் தாய்ப்பாலை மட்டுமே கொடுத்து வர வேண்டும். அது பரம்பரையாய் நோய் தாக்காமல் தடுக்கும் என்பது ஆனந்தமான செய்தி. தாய்ப்பால் ஆரோக்கியமான நோய் எதிர்ப்புச் சக்தியை குழந்தைகளின் உடலில் உருவாக்குகிறது. வணிக நிறுவனங்கள் தரும் எந்த சத்துப் பொருளும் தாய்ப்பாலின் குணாதிசயங்களுக்கு வெகு தொலைவிலேயே நின்று விடுகின்றன என்பதே உண்மை. வணிக நிறுவனங்கள் தங்கள் விற்பனைப் பொருட்களை பிரபலப்படுத்த தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துமாறு ஊக்கப்படுத்து கிறது.

தாய்ப்பாலைக் குடித்து வளரும் குழந்தைகள் வலிகளைத் தாங்கும் வலிமை படைத்ததாகவும் இருக்கின்றன. . தாய்ப்பாலில் இருக்கும் அமிலத் தன்மை எண்டோர்பின் எனப்படும் வலி நிவாரணி அதிகம் சுரக்க வழி செய்வதே இதன் காரணமாம். தாய்ப்பாலில் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து விதமான சத்துகளும் அடங்கியிருக்கின்றன. அது இயற்கையாகவே அமைந்து விட்டதனால் மிக எளிதாக இயல்பாகவே செரிமானமாகி விடுகிறது. வயிறு தொடர்பான நோய்கள் குழந்தைகளுக்கு வருவதைத் தடுக்கிறது. குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளெனில் அவர்களுக்குத் தாய்ப்பால் கொடுப்பது மிக மிக அவசியம்.

ஆரோக்கியத்தை மீண்டெடுக்கவும், துவக்க கால சிக்கல்களிலிருந்து விடுபடவும், நீடிய ஆயுளுக்கும் அது வழி செய்யும். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அறிவு வளர்ச்சியில் சற்று முன்னே நிற்கின்றன. போதிய மூளை வளர்ச்சியும், சுறுசுறுப்பும் அத்தகைய குழந்தைகளுக்கு இருப்பதே இதன் காரணமாகும். குறிப்பாக கணிதவியல், பொது அறிவு, நினைவாற்றல், துல்லியமான பார்வை போன்றவற்றுக்கு தாய்ப்பால் துணை நிற்கிறது. SIDS (Sudden Infant Death Syndrome) எனப்படும் திடீர் மரணங்களிலிருந்து குழந்தைகளளக் காப்பாற்றும் சக்தி தாய்ப்பாலுக்கு உண்டு. பாலூட்டுவது குழந்தைகளுக்கு மட்டுமன்றி தாய்க்கும் பல வகைகளில் பயனளிக்கிறது.

குறிப்பாக பிரசவ காலத்திற்குப் பின் உடலின் எடை குறையவும், தேவையற்ற கலோரிகளை இழக்கவும் பாலூட்டுதல் உதவி செய்கிறது. ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு முறிவு நோய் வரும் வாய்ப்பையும் பாலூட்டுதல் குறைக்கிறது. பெரும்பாலான பெண்கள் தங்கள் மாதவிலக்கு காலம் முடிந்தபின் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்குள் விழுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பிரசவ காலத்தில் நிகழும் உதிரப்போக்கு பாலூட்டும் தாய்மாருக்கு கட்டுக்குள் இருக்கிறது. அத்துடன் கருப்பை தன்னுடைய பழைய நிலைக்கு வருவதற்கு பாலூட்டுதல் பெருமளவு துணை நிற்கிறது. திரும்ப மாதவிலக்கு வரும் காலத்தையும் 20 முதல் 30 வாரங்கள் வரை நீட்டித்து வைக்கும் வல்லமையும் பாலூட்டுதலுக்கு உண்டு.

பாலூட்டும் தாய்க்கு மார்பகப் புற்று நோய், கருப்பை புற்று நோய் வரும் வாய்ப்புகள் பெருமளவு குறைகின்றன. தாய்க்கும் குழந்தைக்குமான உன்னதமான உறவை பாலூட்டுதல் ஆழப்படுத்துகின்றது. பிறந்த உடன் குழந்தைகளால் பன்னிரண்டு முதல் பதினைந்து இஞ்ச் தொலைவு மட்டுமே பார்க்க முடியும். அதாவது தாயின் மார்புக்கும் முகத்திற்கும் இடைப்பட்ட தூரம் ! தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை தாயின் முகத்தையே பாசத்துடன் பார்த்து பந்தத்தைப் பலப்படுத்திக் கொள்கிறது. முதல் ஆறுமாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளை வைரஸ், பாக்டீரியா தாக்குதலிலிருந்து காப்பாற்றுகிறது.

மழலைக்காலங்களில் வரும் இத்தகைய தாக்குதல்களினால் ஏராளமான உயிரிழப்புகள் நேரிடுகின்றன என்பது கவலைக்குரிய செய்தியாகும். தாய்ப்பால் இதையனைத்தையும் எதிர்க்கும் கவசமாகச் செயல்படுகிறது. தாய்ப்பால் கொடுக்க முடியாதசூழலில் பசுவின் பால் கொடுக்கும் வழக்கம் பலருக்கும் இருக்கிறது. இது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். பசுவின் பால் எளிதில் செரிமானமாவதில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர். பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டு தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்ட தாய்மார்கள் நல்ல தரமான குழந்தைகளுக்குரிய பால் பொருட்களை பயன்படுத்த வேண்டும்தாய்ப்பாலிலுள்ள ஹேம்லெட் என்ற பொருள், 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் பெற்றுள்ளது என, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி கண்டறிவதற்காக ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது, தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது தான், ஹ்யூமன் ஆல்பா லாக்தல்பூமின் மேட் லெதல் டூ ட்யூமர்! இதன் சுருக்கம்தான், ஹேம்லெட்! மனித உடலில், ஹேம்லெட் என்ன பங்காற்றுகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

சமீபத்தில், ஸ்வீடன் நாட்டின் லுண்ட் பல்கலை மற்றும் கோத்தென் பெர்க் பல்கலையின் ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், இந்த ஹேம்லெட் மனித உடலிலுள்ள 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வின் போது, சிறுநீர்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு, ஹேம்லெட் கொடுக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது, சிறுநீருடன் புற்றுநோய் செல்கள் இறந்த நிலையில் வெளியேறியது கண்டறியப்பட்டது.

இதன் மூலம், புற்றுநோய்க்கான சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படக் கூடும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். ஹேம்லெட் புற்றுநோய் செல்களை மட்டுமே அழிக்கிறது; மற்ற செல்களை பாதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹேம்லெட் எப்படி புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது குறித்து, ஆய்வு நடந்து வருகிறது. குழந்தையின் வயிற்றில் செல்லும் தாய்ப்பாலில் உள்ள, ஹேம்லெட் அங்கு, அமிலத் தன்மையை உருவாக்குகிறது. அதன் மூலமே, கேன்சர் செல்கள் அழிக்கப்படுகின்றன என்று தெரிய வந்துள்ளது.

தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒவ்வாவை நோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது. ஒவ்வாமையினால் வரும் ஆஸ்த்மா நோயைத் தடுக்கும் சக்தி தாய்ப்பாலுக்கு இருக்கிறது குழந்தைகளுக்கு தாய்ப்பால் பல வழிகளிலும் ஆரோக்கியத்தைத் தருகின்றது. பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதலில் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கின்றனர் ஆனால் சில வாரங்களிலேயே பல்வேறு காரணங்களைக் காட்டி நிறுத்திவிடுகின்றனர்.. இது மிகவும் தவறானதாகும்.

ஆறுமாதங்கள் முதல் ஒரு வயது வரை தாய்ப்பாலில் குழந்தைகள் வளர்வதே ஆரோக்கியமானது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் மருத்துவமனைகளுக்குச் செல்லும் வாய்ப்பு 80% குறைகிறது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அதிக எடையுடன் வளரும் ஆபத்திலிருந்தும் தப்பிக்கிறது. குழந்தையின் தாடை வளர்ச்சிக்கும் இது பயனளிக்கிறது. குழந்தைப் பருவத்தைக் கடந்து வாலிப வயதை அடையும் போது கூட குழந்தைகள் சரியான எடையில் வளர சிறு வயதில் குடிக்கும் தாய்ப்பால் உதவுகிறது. தாய்ப்பாலை குறைந்தது முதல் ஆறுமாதங்கள் குடித்து வளரும் குழந்தைகள் நீரிழிவு நோயினின்றும் தப்பி விடுகின்றன.

குறிப்பாக குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவு நோய் இருந்தால் குழந்தைக்கு ஆறுமாதங்கள் வெறும் தாய்ப்பாலை மட்டுமே கொடுத்து வர வேண்டும். அது பரம்பரையாய் நோய் தாக்காமல் தடுக்கும் என்பது ஆனந்தமான செய்தி. தாய்ப்பால் ஆரோக்கியமான நோய் எதிர்ப்புச் சக்தியை குழந்தைகளின் உடலில் உருவாக்குகிறது. வணிக நிறுவனங்கள் தரும் எந்த சத்துப் பொருளும் தாய்ப்பாலின் குணாதிசயங்களுக்கு வெகு தொலைவிலேயே நின்று விடுகின்றன என்பதே உண்மை. வணிக நிறுவனங்கள் தங்கள் விற்பனைப் பொருட்களை பிரபலப்படுத்த தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துமாறு ஊக்கப்படுத்து கிறது.

தாய்ப்பாலைக் குடித்து வளரும் குழந்தைகள் வலிகளைத் தாங்கும் வலிமை படைத்ததாகவும் இருக்கின்றன. . தாய்ப்பாலில் இருக்கும் அமிலத் தன்மை எண்டோர்பின் எனப்படும் வலி நிவாரணி அதிகம் சுரக்க வழி செய்வதே இதன் காரணமாம். தாய்ப்பாலில் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து விதமான சத்துகளும் அடங்கியிருக்கின்றன. அது இயற்கையாகவே அமைந்து விட்டதனால் மிக எளிதாக இயல்பாகவே செரிமானமாகி விடுகிறது. வயிறு தொடர்பான நோய்கள் குழந்தைகளுக்கு வருவதைத் தடுக்கிறது. குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளெனில் அவர்களுக்குத் தாய்ப்பால் கொடுப்பது மிக மிக அவசியம்.

ஆரோக்கியத்தை மீண்டெடுக்கவும், துவக்க கால சிக்கல்களிலிருந்து விடுபடவும், நீடிய ஆயுளுக்கும் அது வழி செய்யும். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அறிவு வளர்ச்சியில் சற்று முன்னே நிற்கின்றன. போதிய மூளை வளர்ச்சியும், சுறுசுறுப்பும் அத்தகைய குழந்தைகளுக்கு இருப்பதே இதன் காரணமாகும். குறிப்பாக கணிதவியல், பொது அறிவு, நினைவாற்றல், துல்லியமான பார்வை போன்றவற்றுக்கு தாய்ப்பால் துணை நிற்கிறது. SIDS (Sudden Infant Death Syndrome) எனப்படும் திடீர் மரணங்களிலிருந்து குழந்தைகளளக் காப்பாற்றும் சக்தி தாய்ப்பாலுக்கு உண்டு. பாலூட்டுவது குழந்தைகளுக்கு மட்டுமன்றி தாய்க்கும் பல வகைகளில் பயனளிக்கிறது.

குறிப்பாக பிரசவ காலத்திற்குப் பின் உடலின் எடை குறையவும், தேவையற்ற கலோரிகளை இழக்கவும் பாலூட்டுதல் உதவி செய்கிறது. ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு முறிவு நோய் வரும் வாய்ப்பையும் பாலூட்டுதல் குறைக்கிறது. பெரும்பாலான பெண்கள் தங்கள் மாதவிலக்கு காலம் முடிந்தபின் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்குள் விழுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பிரசவ காலத்தில் நிகழும் உதிரப்போக்கு பாலூட்டும் தாய்மாருக்கு கட்டுக்குள் இருக்கிறது. அத்துடன் கருப்பை தன்னுடைய பழைய நிலைக்கு வருவதற்கு பாலூட்டுதல் பெருமளவு துணை நிற்கிறது. திரும்ப மாதவிலக்கு வரும் காலத்தையும் 20 முதல் 30 வாரங்கள் வரை நீட்டித்து வைக்கும் வல்லமையும் பாலூட்டுதலுக்கு உண்டு.

பாலூட்டும் தாய்க்கு மார்பகப் புற்று நோய், கருப்பை புற்று நோய் வரும் வாய்ப்புகள் பெருமளவு குறைகின்றன. தாய்க்கும் குழந்தைக்குமான உன்னதமான உறவை பாலூட்டுதல் ஆழப்படுத்துகின்றது. பிறந்த உடன் குழந்தைகளால் பன்னிரண்டு முதல் பதினைந்து இஞ்ச் தொலைவு மட்டுமே பார்க்க முடியும். அதாவது தாயின் மார்புக்கும் முகத்திற்கும் இடைப்பட்ட தூரம் ! தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை தாயின் முகத்தையே பாசத்துடன் பார்த்து பந்தத்தைப் பலப்படுத்திக் கொள்கிறது. முதல் ஆறுமாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளை வைரஸ், பாக்டீரியா தாக்குதலிலிருந்து காப்பாற்றுகிறது.

மழலைக்காலங்களில் வரும் இத்தகைய தாக்குதல்களினால் ஏராளமான உயிரிழப்புகள் நேரிடுகின்றன என்பது கவலைக்குரிய செய்தியாகும். தாய்ப்பால் இதையனைத்தையும் எதிர்க்கும் கவசமாகச் செயல்படுகிறது.

Thursday 7 March 2013

தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!!!

தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!!!

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு சாப்பிட்டால், தலை வலியை சரிசெய்யலாம். அதிலும் ஆல்கஹால் அருந்துவதால் ஏற்படும் தலைவலியைகுணமாக்கும். பொதுவாக ஆல்கஹால் அருந்தினால், சிறுநீர் அடிக்கடி வரும், இதனால் உடலில் வறட்சி ஏற்பட்டு, உடலுக்கு அவசியமான சத்தான பொட்டாசியம் வெளியேறிவிடும். இத்தகைய பொட்டாசியம் உருளைக்கிழங்கில் அதிகம் உள்ளது. எனவே தலை வலி இருக்கும் போது, உருளைக்கிழங்கை தோலோடு சாப்பிட்டால், வாழைப்பழத்தை விட அதிகப்படியான பொட்டாசியத்தை பெறலாம்.


தர்பூசணி

உடலில் வறட்சியினால் தலை வலி வரும். எனவே தலை வலியின் போது மாத்திரைகளை சாப்பிடுவதை விட, நீர்சசத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களான தர்பூசணியை சாப்பிடலாம். அதிலும் தர்பூசணியில் நீர்ச்சத்து மட்டுமின்றி, மக்னீசியம் சத்தும் அதிகம் உள்ளது. மக்னீசியம் அதிகம் உள்ள உணவுகளை உண்டாலும், தலைவலியை குறைக்கலாம்.


காபி

ஆம், தலை வலியின் போது காபி குடித்தால், தலை வலி போய்விடும். ஏனெனில் தலைவலிக்கும் போது உட்கொள்ளும் மாத்திரைகளில் காப்ஃபைன் இருப்பதால் தான் தலைவலி குணமாகிறது. ஆகவே தலை வலிக்கும் போது காப்ஃபைன் அதிகம் உள்ள காபியை குடித்தால், தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும். அதிலும் ஒரு கப் குடிப்பது போதுமானது.


கோதுமை பிரட்

கார்போஹைட்ரேட் உடலில் குறைவாக இருந்தாலும், தலை வலி உண்டாகும். எனவே காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை சேர்க்க வேண்டும். அதற்கு போதுமை பிரட், பழங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். இதனால் உடலில் உள்ள செரோட்டின் உற்பத்தி அதிகமாகி, மனநிலையும் நன்கு இருக்கும்.


பாதாம்

நிறைய ஆய்வுகளில் பாதாமில் இருக்கும் மக்னீசியமானது தலைவலிக்கு சிறந்த தீர்வைத் தரும் என்று சொல்கிறது. எனவே ஒற்றைத் தலை வலியால் பாதிக்கப்பட்டவர்கள், மக்னீசியம் உணவுகளை சாப்பிட்டால், நல்லது. அதற்கு பாதாம், வாழைப்பழம், அவகேடோ போன்றவற்றை சாப்பிட வேண்டும்.


காரமான உணவுகள்

தலைவலியின் போது கார உணவுகளை சாப்பிட்டால், தலை வலியானது சீக்கிரம் பறந்து போய்விடும்.


தயிர்

தலை வலியின் போது கால்சியம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இதனால் தலை வலி குணமாவதோடு, உடலில் ஏற்படும் கால்சியம் குறைபாட்டை தடுக்கலாம்.


எள்

எள்ளில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. ஆகவே இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிப்பதோடு, கடுமையான தலை வலியும் போய்விடும். மேலும் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும். இவற்றில் மக்னீசியமும் அதிகம் உள்ளது.

பசலைக் கீரை

பசலைக் கீரை உடலில் உள்ள இரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, தலைவலியையும் குறைக்கும். எனவே தலை வலிப்பது போல் இருந்தால், அந்த நேரம் சாலட் செய்து, அதில் லெட்யூஸ் பயன்படுத்துவதற்கு பதிலாக பசலைக் கீரையைப் பயன்படுத்தலாம். இதனால் தலை வலியைக் குறைக்கலாம்.

வயிற்று புற்றுநோயை கண்டறிய எளிய மூச்சு பரிசோதனை...........!!

வயிற்று புற்றுநோயை கண்டறிய எளிய மூச்சு பரிசோதனை...........!!

மனித உடம்பை அரித்துக் கொல்லும் கொடிய நோயான புற்றுநோய், முற்றிய பிறகே கண்டறியக் கூடியதாக உள்ளது. அதிலும், வயிற்றுப் பகுதியில் தோன்றும் புற்று நோய் நாட்பட்ட நிலையிலேயே வெளித்தெரிவதால் நோயாளிகள் பிழைப்பது மிகவும் கடினமாகிறது.

இங்கிலாந்து நாட்டில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 7000 பேர் இந்த வயிற்று புற்று நோய் தாக்கத்திற்கு ஆளாகிறார்கள். அதில் பெரும்பாலோருக்கு நோய் முற்றிய நிலையிலேயே தெரிய வருகிறது.

இதைப்பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “இந்த வகை புற்றுநோயாளிகளில் சிகிச்சைக்குப் பின் ஐந்தில் ஒருவர்தான் ஐந்து வருடங்கள் உயிர் வாழ்கிறார். இருவர் ஒரு வருடம் மட்டுமே வாழ்கின்றனர்.

வயிற்றுக்குள் செலுத்தப்படும் நுட்பமான காமிராவினால் வயிற்றுத் திசுக்களை பரிசோதிப்பதே இந்த புற்று நோயை கண்டுபிடிப்பதற்கு பயன்படுத்தப்படும் தற்போதைய நடைமுறை. ஆனால், இப்போது மூச்சுக்காற்றைப் பரிசோதிப்பதன் மூலம் இவ்வகை புற்று நோயை எளிதாக கண்டறியலாம் என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வெளியிடும் மூச்சுக்காற்றின் ரசாயன மாறுபாடுகள் மற்ற வயிற்று உபாதைகளிலிருந்து மாறுபடும். தகுந்த மருத்துவ உபகரணங்களால் இதனைக் கண்டறியலாம்” என்றனர்.

இஸ்ரேலிலும், சீனாவிலும் விஞ்ஞானிகள் 130 நோயாளிகளை இந்த புதிய முறையில் பரிசோதித்துப் பார்த்ததில் 90 சதவிகித முடிவுகள் சரியாக அமைந்தன. இதைப்பற்றி இஸ்ரேலின் தொழில்நுட்பப் பேராசிரியர் ஹோசம் ஹைக் கூறுகையில், நீண்ட ஆராய்ச்சிகள் தேவைப்பட்டாலும் இது ஒரு நல்ல பலனைத்தரும் முறை என்றார்.

இங்கிலாந்து நாட்டின் புற்று நோய் குறித்த பத்திரிக்கை இதழும், இம்முறை நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும், நோய் குறித்த பரிசோதனையை விரைவுபடுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

“நீண்ட கால சோதனைகள் தேவைப்பட்டாலும், தற்போதைய கண்டுபிடிப்புகள் நம்பிக்கை அளிக்கின்றன. நோயின் தாக்கம் நாட்பட்ட பின்னரே வெளித்தெரிவதால் ஐந்தில் ஒருவர் மட்டுமே அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிகிறது. ஆரம்பகட்டத்தில் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் நோயாளிகள் உயிர் வாழ்வதற்கான சாத்தியங்களும் அதிகரிக்கும்" என்று இங்கிலாந்தின் மருத்துவ ஆராய்ச்சிக் கழக தலைவர் கேட்லா தெரிவித்தார்.

Wednesday 6 March 2013

உருளை கிழங்கின் மருத்துவ குணம் பற்றிய தகவல்.........!!

உருளை கிழங்கின் மருத்துவ குணம் பற்றிய தகவல்.........!!

1) நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியை அள்ளித் தரும்.

2) உருளைக்கிழங்கு காரத்தன்மை நிறைந்த கிழங்கு. புளித்த ஏப்பம் பிரச்னையால் அவதிப்படுகிறவர்கள் உருளைக்கிழங்கைச் சமைத்துச் சாப்பிட்டால் நல்ல குணம் தெரியும்.

3) உருளை அற்புதமான சிறுநீர்ப்பெருக்கி,

4) காலையில் வெறும் வயிற்றில் உருளைக்கிழங்கை பச்சையாக அரைத்து சாறு எடுத்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண் குணமாகும்.

5) வாரத்துக்கு 2,3 நாட்கள் உருளைக்கிழங்கை சாப்பிட்டு வர பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்கும்.

6) குடலில் உள்ள நல்ல கிருமிகளை அதிகரிக்கச் செய்வதால் நோய் எதிர்ப்புச் சக்தியும் ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.

7) உருளைக்கிழங்கை அரைத்து குழைத்து தீக்காயம் பட்ட இடத்தில் பூசினால் உடனே புண் ஆறும். தடமும் விரைவில் மறைந்துவிடும்.

8) உருளைக் கிழங்கைத் தோலுடன் சமைத்துச் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்னைகள் தீரும். சருமம் பளபளப்பாகும்.

குறிப்பு :

வாய்வு தொல்லை உள்ளவர்கள் இதய நோய் உள்ளவர்கள் உருளை கிழங்கை தவிர்ப்பது நல்லது